Saturday, October 22, 2016

Filled Under:

பெரம்பலூர் அருகே இளைஞர் மர்மச் சாவு.


images பெரம்பலூர் அருகே மர்மமான முறையில் இளைஞர் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூர் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் அரசபூபதி (27). இவர், வெள்ளிக்கிழமை காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வயலில் அரசபூபதி இறந்து கிடந்தது மாலையில் தெரியவந்தது. தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீஸார் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்
நன்றி: கல்லாறு

0 comments:

Post a Comment