பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உயிருடன் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சித்தளி, ரஞ்சன்குடி, வேப்பந்தட்டை, பாடாலூர் உள்ளிட்ட கிராமங்களில் வனத் துறைக்குச் சொந்தமான காப்பு காடுகளில் ஏராளமான மான்கள் உள்ளன.
இந்தப் பகுதிகளிலிருந்து குடிநீருக்காக வெளியேறும் மான்கள் வாகனங்கள் மோதியும், தெரு நாய்கள் கடித்தும் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், பெரம்பலூர் அருகயுள்ள கோனேரிப்பாளையம் கிராமத்துக்குள் 2 வயதுள்ள புள்ளிமான் வெள்ளிக்கிழமை காலையில் புகுந்தது. அதனை தெரு நாய்கள் துரத்தியதையடுத்து, மான் அந்த கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி என்பவருக்கு சொந்தமான வயலில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
தகவலறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மானை உயிருடன் மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட மான் சித்தளி வனப்பகுதியில் விடப்பட்டது
நன்றி: கல்லாறு
0 comments:
Post a Comment