Wednesday, October 26, 2016

Filled Under:

வா.களத்தூர் தண்ணீர் பிரச்சினை

வி.களத்தூர் தண்ணீர் பிரச்சனை - இயற்கையின் எச்சரிக்கை :

இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தண்ணீர் பிரச்சனை. இந்த ஆண்டின் ஆரம்பம் முதலே பெரும் வறட்சியைதான் நாடு எதிர்கொண்டு வருகிறது. 33 கோடி பேர் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நிலத்தடி நீர் முன்பைவிட மிகவேமாக குறைந்து வருகிறது. அதுபோன்ற ஒருநிலை நாம் வாழும் பகுதிக்கும் விரைந்து வருகிறது. வி.களத்தூரிலும் இதே நிலைதான். மோட்டார் பழுது என்பது தவறான செய்தி. நிலத்தடியில் நீரின் இருப்பு குறைந்துவிட்டது. வி.களத்தூரில் மில்லத்நகர், வண்ணாரம்பூண்டி போன்ற பகுதியில் மட்டுமே உள்ள இந்த நீர் தட்டுப்பாடு ஊரின் முழுமையும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. இதேநிலை தொடரும்பட்சத்தில் மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும்.

இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்கும் வழிவகையினை காணவேண்டும். இயற்கையான நீராதாரங்களை காக்க முன் வரவேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த முயல வேண்டும்.

இந்தியாவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு ஆழ்துளை கிணற்றின்மூலம் தண்ணீர் இறைக்கப்படுவதும் ஒரு காரணம். நாடு முழுவதும் 2.3 கோடி ஆழ்துளை கிணறு இருக்கின்றன. அதனால் நிலத்தடி நீர் வேகமாக குறைகிறது. அதேபோல் நமது பகுதியில் தனித்தனியாக மோட்டார் வைத்து தண்ணீர் பிடித்தால் நிலத்தடி நீர் வேகமாக வற்றிவிடும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதுவும் மக்கள் தொகை அதிகம் இருக்கும் பகுதிகளில் இப்பிரச்சனை முன்பே தீவிரம் காட்டத்தொடங்கிவிடும்.

நிலத்தடிநீர் வற்றாமல் இருப்பதற்கான காரணிகளில் நமது கவனம் குவியப்பட வேண்டும். இயற்கையை பாதுகாக்க முயல வேண்டும். அதற்கான களப்பணிகளில் நாம் ஈடுபட்டாக வேண்டும். அதை தவிர்த்து வேறு எதுவும் தீர்வு தராது.

- வி.களத்தூர் எம்.பாரூக்

0 comments:

Post a Comment