Thursday, September 29, 2016

Filled Under:

எல்லையில் பதட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம்


புதுடெல்லி

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் 2-கி.மீ தொலைவு உள்ளே சென்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வரும் வேளையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தொடர் தாக்குதல் குறித்து ஆலோசனை செய்ய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர்மட்ட’குழு கலந்து கொள்ளும் பிரதமர் தலைமையிலான கூட்டம் இன்று நடக்க உள்ளது.

முதல் கூட்டம் உள்துறை அமைச்சர் ராஜநாத்சிங் தலைமையில் 11 மணிக்கு நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தீவிரப்படுத்துவது,தொடர் தாக்குதல் நடத்துவது போன்றவை ஆலோசிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் பிரதமர் தலைமையில் நடக்க உள்ள கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் சில முக்கிய கட்சி தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று தெரிய வருகிறது. அந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.எல்லையில் பதட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம்

Post by:vkalathur kalam 

0 comments:

Post a Comment