Thursday, September 29, 2016

Filled Under:

பதிலடி தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய ராணுவ வீரர்


புதுடெல்லி

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் 2-கி.மீ தொலைவு உள்ளே சென்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 8 பேரை சுட்டு வீழ்த்தியதாகவும், மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயதாகும், சந்து பாபுலால் சவுகான் என்ற ராணுவ வீரரை பிடித்து வைத்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவ தரப்பில், இந்த ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ தாக்குதலில் 40 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்றும், நமது ராணுவ வீரர்களுக்கு எந்தவித உயிர் சேதமும் நிகழாமல் திரும்பியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. தேநேரம், சந்து பாபுலால் தவறுதலாக எல்லையை தாண்டியதாகவும் அப்போது பிடிபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post by:vkalathur kalam 

0 comments:

Post a Comment