
கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டத்தில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வேண்டுமென்றே வன்முறையைத் தூண்டிவிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்த முயலுகின்றன என அந்த மாநில முதல்வர் பின ராயி விஜயன் குற்றம்சாட்டினார்.
கண்ணனூர் மாவட்டத்தில் அவ்வப்போது அரசியல் கொலைகள் நடைபெறுகின்றன. இந்த மாதம் மட்டுமே மார்க்சிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைகளுக்குக் காரணம் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும், பாஜகவும், மார்க்சிஸ்ட் கட்சியும் என்று காங்கிரஸýம் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், கேரள சட்டப் பேரவை புதன்கிழமை கூடியதும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி. ஜோசப், கண்ணனூரில் பாஜகவுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல் சம்பவம் குறித்து விவாதிக்குமாறு ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீûஸ வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், "இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சிக்கு வந்த கடந்த 4 மாதங்களில் அரசியல் முன்விரோதம் காரணமாக 7 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்' என்றார். இதைத் தொடர்ந்து அவர் கொண்டு வந்த நோட்டீஸýக்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த விளக்கம்:
கண்ணனூரில் நடைபெற்று வரும் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. போலீஸாரும் பாரபட்சமின்றி தங்கள் கடமையைச் செய்கின்றனர்.
அரசியல் வன்மம் காரணமாக 7 கொலைகள் நடந்ததாக காங்கிரஸ் கூறுவது தவறு. அந்த 7 கொலைகளில் 5 மட்டுமே அரசியல் நோக்கத்துக்காக நடந்தது. பாஜக கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கண்ணனூரில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட முயற்சிக்கின்றன.
கண்ணனூரில் அமைதி நிலவ அந்த மாவட்ட அளவிலான அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். பிறகு தேவைப்பட்டால், மாநில அளவிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டலாம்.
பதற்றமான மாவட்டங்களாக கருதப்படும் குத்துபரம்பு மற்றும் தலச்சேரியில் காவல் நிலைய சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
வரவேற்புக்குரியது: எதிர்கக்ட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசுகையில் பாஜக, மார்க்சிஸ்ட் இரண்டும் மாறி மாறி அறிக்கைகள் விட்டு வன்முறையை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினார்.
எனினும் முதல்வரின் நடவடிக்கைகளை வரவேற்ற அவர், வன்முறைகளைத் தடுக்க போலீஸார் தவறிவிட்டதாகக் கூறி வெளிநடப்புச் செய்தார்.
இதனிடையே, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் தேதியை முதல்வர் அறிவிக்க வேண்டும். மேலும் ஒட்டுமொத்த மாநிலமே, அமைதியை எதிர்நோக்கி உள்ளது. என்று முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.
முன்னதாக, கண்ணனூரில் அரசியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர, வியூகங்களை வகுப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என ஐக்கிய ஜனநாயக முன்னணியின் பிரதிநிதிகள் முதல்வர் பினராயி விஜயனை செவ்வாய்க்கிழமை சந்தித்து வலியுறுத்தினர்.
கண்ணனூர் மாவட்டத்தில் அவ்வப்போது அரசியல் கொலைகள் நடைபெறுகின்றன. இந்த மாதம் மட்டுமே மார்க்சிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைகளுக்குக் காரணம் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் என்று மார்க்சிஸ்ட் கட்சியும், பாஜகவும், மார்க்சிஸ்ட் கட்சியும் என்று காங்கிரஸýம் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், கேரள சட்டப் பேரவை புதன்கிழமை கூடியதும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி. ஜோசப், கண்ணனூரில் பாஜகவுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல் சம்பவம் குறித்து விவாதிக்குமாறு ஒத்திவைப்பு தீர்மானத்துக்கான நோட்டீûஸ வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், "இடதுசாரிகள் ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சிக்கு வந்த கடந்த 4 மாதங்களில் அரசியல் முன்விரோதம் காரணமாக 7 பேர் கொல்லப்பட்டுவிட்டனர்' என்றார். இதைத் தொடர்ந்து அவர் கொண்டு வந்த நோட்டீஸýக்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த விளக்கம்:
கண்ணனூரில் நடைபெற்று வரும் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. போலீஸாரும் பாரபட்சமின்றி தங்கள் கடமையைச் செய்கின்றனர்.
அரசியல் வன்மம் காரணமாக 7 கொலைகள் நடந்ததாக காங்கிரஸ் கூறுவது தவறு. அந்த 7 கொலைகளில் 5 மட்டுமே அரசியல் நோக்கத்துக்காக நடந்தது. பாஜக கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கண்ணனூரில் மதக் கலவரத்தைத் தூண்டிவிட முயற்சிக்கின்றன.
கண்ணனூரில் அமைதி நிலவ அந்த மாவட்ட அளவிலான அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். பிறகு தேவைப்பட்டால், மாநில அளவிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டலாம்.
பதற்றமான மாவட்டங்களாக கருதப்படும் குத்துபரம்பு மற்றும் தலச்சேரியில் காவல் நிலைய சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
வரவேற்புக்குரியது: எதிர்கக்ட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசுகையில் பாஜக, மார்க்சிஸ்ட் இரண்டும் மாறி மாறி அறிக்கைகள் விட்டு வன்முறையை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டினார்.
எனினும் முதல்வரின் நடவடிக்கைகளை வரவேற்ற அவர், வன்முறைகளைத் தடுக்க போலீஸார் தவறிவிட்டதாகக் கூறி வெளிநடப்புச் செய்தார்.
இதனிடையே, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் தேதியை முதல்வர் அறிவிக்க வேண்டும். மேலும் ஒட்டுமொத்த மாநிலமே, அமைதியை எதிர்நோக்கி உள்ளது. என்று முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறினார்.
முன்னதாக, கண்ணனூரில் அரசியல் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர, வியூகங்களை வகுப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என ஐக்கிய ஜனநாயக முன்னணியின் பிரதிநிதிகள் முதல்வர் பினராயி விஜயனை செவ்வாய்க்கிழமை சந்தித்து வலியுறுத்தினர்.
0 comments:
Post a Comment