
இந்தியா, மியான்மர் இடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்தத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்வதற்கும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன.
மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூ கீயின் "நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி' கட்சி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஆங் சாங் சூ கீ பொறுப்பேற்ற பிறகு, இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பின்பு தில்லி வந்த ஆங் சாங் சூ கீயை, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது: ஆங் சாங் சூ கீக்கு இந்தியா அறிமுகமில்லாத நாடு அல்ல. தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவியான அவருக்கு, தில்லி ஏற்கெனவே நன்கு பரிச்சயமானது. சூ கீயின் இரண்டாவது இல்லமான இந்தியாவுக்கு வந்துள்ள அவரை மீண்டும் வரவேற்கிறேன்.
ஆங் சாங் சூ கீ உடனான சந்திப்பு, ஆக்கப்பூர்வமாகவும், பரந்துபட்ட அளவிலும் இருந்தது.
அவரது தலைமையில் மியான்மர் அரசு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. அந்நாட்டுக்கு இந்திய அரசு எப்போதும் முழு ஆதரவு அளிக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லைப் பாதுகாப்பில் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படுவது என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதுதவிர, விவசாயம், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியாவையும் மியான்மரையும் இணைக்கும் "கலாடன்' திட்டம், இந்தியா-மியான்மர்-தாய்லாந்து நாடுகளை இணைக்கும் சாலைத் திட்டம் போன்ற மிகப்பெரிய திட்டங்கள் முதல், சுகாதாரம், மனிதவள மேம்பாடு, திறன்மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட துறைகள் வரை, இந்தியா தனது ஆற்றல் வளங்களை மியான்மருடன் பகிர்ந்துகொண்டுள்ளது.
தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்காக, மியான்மரின் யெஜின் நகரில் விதை உற்பத்தி மையம் ஒன்றை இந்தியா உருவாக்கும். பயறு வர்த்தகத்தில் இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்படும். மணிப்பூரில் இருந்து மியான்மருக்கு அளிக்கப்படும் மின்சாரத்தின் அளவு உயர்த்தப்படும். மியான்மரில் அந்நாட்டு அரசுடன் இணைந்து எல்இடி விளக்குகள் தயாரிக்கும் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தும் என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து, ஆங் சாங் சூ கீ கூறியதாவது: எங்களுடைய ஜனநாயகப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகியோரின் சிந்தனைகள் எங்களுக்குப் பேருதவியாக இருந்தன. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட அவர்கள் இருவரின் தொலைநோக்குப் பார்வையும், நம்பிக்கையும் எங்களைப் பெரிதும் கவர்ந்தன.
எனது இந்தியப் பயணம், மகிழ்ச்சி அளிப்பதாகவும், மன நிறைவைத் தருவதாகவும் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான நட்பும், உறுதிப்பாடும் நீண்ட காலமாகத் தொடர்வதை இந்தப் பயணம் உறுதிசெய்துள்ளது. மியான்மரில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, இந்தியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் எனறும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறது.
எங்களுடைய முயற்சிகளுக்கு இந்தியா உதவுமென்று நம்புகிறோம். எனவே, இந்தியாவுடன் கட்டுமானம், எரிசக்தி, கலாசாரம், கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்ய உள்ளோம். மியான்மரில் அமைதியை ஏற்படுத்தவதற்கு பல ஆண்டுகளாக முயன்று வருகிறோம். அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது என்றே நம்புகிறோம். இந்த விஷயத்தில் மக்களை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை பன்முக கலாசாரத் தன்மையுடன் விளங்கும் இந்தியா எங்களுக்கு போதிக்கிறது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியா எங்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றார் அவர்.
மியான்மரில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூ கீயின் "நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி' கட்சி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக ஆங் சாங் சூ கீ பொறுப்பேற்ற பிறகு, இந்தியா வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பின்பு தில்லி வந்த ஆங் சாங் சூ கீயை, பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது: ஆங் சாங் சூ கீக்கு இந்தியா அறிமுகமில்லாத நாடு அல்ல. தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவியான அவருக்கு, தில்லி ஏற்கெனவே நன்கு பரிச்சயமானது. சூ கீயின் இரண்டாவது இல்லமான இந்தியாவுக்கு வந்துள்ள அவரை மீண்டும் வரவேற்கிறேன்.
ஆங் சாங் சூ கீ உடனான சந்திப்பு, ஆக்கப்பூர்வமாகவும், பரந்துபட்ட அளவிலும் இருந்தது.
அவரது தலைமையில் மியான்மர் அரசு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. அந்நாட்டுக்கு இந்திய அரசு எப்போதும் முழு ஆதரவு அளிக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லைப் பாதுகாப்பில் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்படுவது என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதுதவிர, விவசாயம், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியாவையும் மியான்மரையும் இணைக்கும் "கலாடன்' திட்டம், இந்தியா-மியான்மர்-தாய்லாந்து நாடுகளை இணைக்கும் சாலைத் திட்டம் போன்ற மிகப்பெரிய திட்டங்கள் முதல், சுகாதாரம், மனிதவள மேம்பாடு, திறன்மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட துறைகள் வரை, இந்தியா தனது ஆற்றல் வளங்களை மியான்மருடன் பகிர்ந்துகொண்டுள்ளது.
தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்காக, மியான்மரின் யெஜின் நகரில் விதை உற்பத்தி மையம் ஒன்றை இந்தியா உருவாக்கும். பயறு வர்த்தகத்தில் இரு நாடுகளும் பயன்பெறும் வகையில் ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்படும். மணிப்பூரில் இருந்து மியான்மருக்கு அளிக்கப்படும் மின்சாரத்தின் அளவு உயர்த்தப்படும். மியான்மரில் அந்நாட்டு அரசுடன் இணைந்து எல்இடி விளக்குகள் தயாரிக்கும் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தும் என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து, ஆங் சாங் சூ கீ கூறியதாவது: எங்களுடைய ஜனநாயகப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகியோரின் சிந்தனைகள் எங்களுக்குப் பேருதவியாக இருந்தன. இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட அவர்கள் இருவரின் தொலைநோக்குப் பார்வையும், நம்பிக்கையும் எங்களைப் பெரிதும் கவர்ந்தன.
எனது இந்தியப் பயணம், மகிழ்ச்சி அளிப்பதாகவும், மன நிறைவைத் தருவதாகவும் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான நட்பும், உறுதிப்பாடும் நீண்ட காலமாகத் தொடர்வதை இந்தப் பயணம் உறுதிசெய்துள்ளது. மியான்மரில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, இந்தியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் எனறும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறது.
எங்களுடைய முயற்சிகளுக்கு இந்தியா உதவுமென்று நம்புகிறோம். எனவே, இந்தியாவுடன் கட்டுமானம், எரிசக்தி, கலாசாரம், கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கச் செய்ய உள்ளோம். மியான்மரில் அமைதியை ஏற்படுத்தவதற்கு பல ஆண்டுகளாக முயன்று வருகிறோம். அதற்கான நேரம் இப்போது வந்துவிட்டது என்றே நம்புகிறோம். இந்த விஷயத்தில் மக்களை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்பதை பன்முக கலாசாரத் தன்மையுடன் விளங்கும் இந்தியா எங்களுக்கு போதிக்கிறது. பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியா எங்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றார் அவர்.
0 comments:
Post a Comment