
சென்னை : தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இத்தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து படிவம் பி வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதில் இடது கையின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிவம் பி-ல் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அதற்குப் பதிலாக அவருடைய விரல் ரேகை பதிக்கப்பட்டு இருக்கிறது என்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் பி. பாலாஜி, இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார். மேலும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் பாபு ஆப்ரஹாம் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.
இத்தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து படிவம் பி வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதில் இடது கையின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிவம் பி-ல் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அதற்குப் பதிலாக அவருடைய விரல் ரேகை பதிக்கப்பட்டு இருக்கிறது என்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் பி. பாலாஜி, இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார். மேலும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் பாபு ஆப்ரஹாம் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.
0 comments:
Post a Comment