
கடப்பா: ஆந்திரா மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டியதாக தமிழகத்தைச் சேர்ந்த 83 பேர் கைது செய்யப்பட்டனர். கடப்பா மாவட்டம் காஜிப்பேட்டை, பத்வேல், பொதத்தூரில் 83 பேரை வனத்துறை கைது செய்தது. கைதான தமிழர்கள் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கைதானவர்களிடம் இருந்து 42 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆந்திர வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment