கிரிக்கெட் விளையாட்டை விட பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் பெரியவர்கள் கிடையாது என்று நீதிபதி லோதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி:
லோதா கமிட்டி செய்துள்ள பரிந்துரைகளை செயல்படுத்த பி.சி.சி.ஐ. மறுத்து வருகிறது. இதனால் லோதா கமிட்டி பி.சி.சி.ஐ. கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பியது. அதில் பி.சி.சி.ஐ.யின் கணக்கு முடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த அறிக்கையின் நகல் பி.சி.சி.ஐ.க்கும் அனுப்பப்பட்டது.
பணம் இல்லாமல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாது. ஆகையால், நியூசிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படலாம் என்று பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.
பின்னர் வங்கி கணக்கு முடக்கம் குறித்து நீதிபதி லோதா விளக்கம் அளித்திருந்தார். அதில் ‘‘நாங்கள் பி.சி.சி.ஐ.யின் வங்கிக் கணக்கை முடக்கச் சொல்லவில்லை. மாநில கிரிக்கெட் சங்கங்களுக்குத்தான் பணம் ஒதுக்க வேண்டாம் என்று பி.சி.சி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளோம். தினந்தோறும் நடக்கும் பண பரிமாற்றம், வழக்கமான பண பரிவர்த்தனை, போட்டிகள், தொடர்கள் கட்டாயம் தொடர வேண்டும். இதற்கு உண்மையிலேயே தடையில்லை’’ என்றார்.
இந்நிலையில் பி.சி.சி.ஐ. அதிகாரிகள் தங்களை சர்வாதிகாரிகளாக நினைத்துக் கொள்கிறார்கள், விளையாட்டை விட அவர்கள் பெரியவர்கள் கிடையாது என்று நீதிபதி லோதா நேற்று கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து லோதா கூறுகையில் ‘‘பி.சி.சி.ஐ. நிர்வாகிகளை விட கிரிக்கெட் பெரியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரை அவர்கள் நிறுத்த முடியாது. அவர்கள் போட்டியை கட்டாயம் நடத்தியே தீர வேண்டும். லோதா குழுவின் பரிந்துரைகளை அவர்கள் திசைதிருப்ப நினைத்தால், கடவுள்தான் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
அவர்கள் தங்களை சர்வாதிகாரிகள் என்று நினைக்கிறார்கள். சர்வாதிகாரிகள் நன்றாக வேலை செய்வார்கள். ஆனால், அவர்கள் ஜனநாயக நாட்டிற்கு நல்லவர்கள் இல்லை. உச்சநீதிமன்றம் ஒருமுறை உத்தரவிட்டால், அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும். எங்களது அறிக்கைக்கு பி.சி.சி.ஐ. நாளை எப்படி பதிலளிக்கிறது என்று பார்ப்போம்’’ என்றார்.
லோதா கமிட்டி செய்துள்ள பரிந்துரைகளை செயல்படுத்த பி.சி.சி.ஐ. மறுத்து வருகிறது. இதனால் லோதா கமிட்டி பி.சி.சி.ஐ. கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பியது. அதில் பி.சி.சி.ஐ.யின் கணக்கு முடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த அறிக்கையின் நகல் பி.சி.சி.ஐ.க்கும் அனுப்பப்பட்டது.
பணம் இல்லாமல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாது. ஆகையால், நியூசிலாந்து அணிக்கெதிரான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்படலாம் என்று பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.
பின்னர் வங்கி கணக்கு முடக்கம் குறித்து நீதிபதி லோதா விளக்கம் அளித்திருந்தார். அதில் ‘‘நாங்கள் பி.சி.சி.ஐ.யின் வங்கிக் கணக்கை முடக்கச் சொல்லவில்லை. மாநில கிரிக்கெட் சங்கங்களுக்குத்தான் பணம் ஒதுக்க வேண்டாம் என்று பி.சி.சி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளோம். தினந்தோறும் நடக்கும் பண பரிமாற்றம், வழக்கமான பண பரிவர்த்தனை, போட்டிகள், தொடர்கள் கட்டாயம் தொடர வேண்டும். இதற்கு உண்மையிலேயே தடையில்லை’’ என்றார்.
இந்நிலையில் பி.சி.சி.ஐ. அதிகாரிகள் தங்களை சர்வாதிகாரிகளாக நினைத்துக் கொள்கிறார்கள், விளையாட்டை விட அவர்கள் பெரியவர்கள் கிடையாது என்று நீதிபதி லோதா நேற்று கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து லோதா கூறுகையில் ‘‘பி.சி.சி.ஐ. நிர்வாகிகளை விட கிரிக்கெட் பெரியது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரை அவர்கள் நிறுத்த முடியாது. அவர்கள் போட்டியை கட்டாயம் நடத்தியே தீர வேண்டும். லோதா குழுவின் பரிந்துரைகளை அவர்கள் திசைதிருப்ப நினைத்தால், கடவுள்தான் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
அவர்கள் தங்களை சர்வாதிகாரிகள் என்று நினைக்கிறார்கள். சர்வாதிகாரிகள் நன்றாக வேலை செய்வார்கள். ஆனால், அவர்கள் ஜனநாயக நாட்டிற்கு நல்லவர்கள் இல்லை. உச்சநீதிமன்றம் ஒருமுறை உத்தரவிட்டால், அதற்கு கட்டுப்பட்டாக வேண்டும். எங்களது அறிக்கைக்கு பி.சி.சி.ஐ. நாளை எப்படி பதிலளிக்கிறது என்று பார்ப்போம்’’ என்றார்.
Post by:vkalathur kalam
0 comments:
Post a Comment