Sunday, October 2, 2016

Filled Under:

கேரளாவில் தமிழர்கள் உள்ளிட்ட ஐஎஸ் ஆதரவாளர்கள் 6 பேர் கைது: கோவையில் பதுங்கியிருந்த 4 பேரிடம் விசாரனை

6 people, including Tamils arrested in Kerala IS supporters: 4 people questioned hideouts in Coimbatore
கோவை: ஐஎஸ் தீவிரவாதிகள் 6 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் 4 பேரை கோவையில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 21 பேர் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தது, தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி, கேரளா போலீசார் இவர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் கனகமலை வனப்பகுதியில் நடத்திய அதிரடி சோதனையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 6 பேர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களில் கோவையை சேர்ந்தவரும் ஒருவர். இவரிடம் நடத்திய விசாரணையில் கோவை உக்கடம் பகுதியில் மேலும் சிலர் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நள்ளிரவில் உக்கடம் நகருக்கு சென்று சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையறிந்த அந்த பகுதி மக்கள், ஏராளமானோர் திரண்டு போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் ரகுமான், நவாஸ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அவர்களிடமிருந்து ஐஎஸ் அமைப்பு தொடர்பான சில ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை கொட்டிவாக்கம் சத்யா தெருவிலும் சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கைதான ஐஎஸ் ஆதரவாளர்கள் மூலம் கேரளா மற்றும் தமிழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
Post by:vkalathur kalam 

0 comments:

Post a Comment