Saturday, October 1, 2016

Filled Under:

அப்பாவி மக்களை போலீசார் கைது செய்து உள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்

கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது நடைபெற்ற கலவரத்தில் அப்பாவி மக்களை போலீசார் கைது செய்து உள்ளனர் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அப்பாவி மக்களை போலீசார் கைது செய்து உள்ளனர்: பொன்.ராதாகிருஷ்ணன்
பொதுமக்களிடமிருந்து மனுக்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பெற்ற காட்சி.
கவுண்டம்பாளையம்:

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோவை துடியலூரில் பா.ஜனதா அலுவலகத்துக்கு இன்று வந்தார். அப்போது சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுகொண்ட பின் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையில் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது நடைபெற்ற கலவரத்தில் அப்பாவி மக்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

அதில் 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்து உள்ளனர். இதில் துடியலூர் பகுதியில் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததை நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அப்பாவி மக்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது.

போலீசார் விசாரணை நடத்தி நிரபராதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post by:vkalathur kalam 

0 comments:

Post a Comment