
அக்ஹனூர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பலன்வாலா என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி களால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த மூன்று நாட்களில் இது நான்காவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நவ்காம் பிரிவு மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.
Post by:vkalathur kalam இந்த தாக்குதலில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடந்த மூன்று நாட்களில் இது நான்காவது தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நவ்காம் பிரிவு மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.
0 comments:
Post a Comment