தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:
தென்மேற்கு பருவமழை கடலோர கர்நாடகம் மற்றும் தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்தில் உள் பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள் தமிழகத்தில் மழை பெய்கிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
சென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதேபோல் வெள்ளிக்கிழமை (நாளை) உள் தமிழகத்திலும், தென் கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
தென்மேற்கு பருவமழை கடலோர கர்நாடகம் மற்றும் தெற்கு உள் கர்நாடக பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்தில் உள் பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக உள் தமிழகத்தில் மழை பெய்கிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
சென்னையை பொறுத்தவரையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதேபோல் வெள்ளிக்கிழமை (நாளை) உள் தமிழகத்திலும், தென் கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
0 comments:
Post a Comment