படைத்தவனைக் காதலித்துப் பார்...
உனக்குள்ளே பல மாறுதல் தோன்றும்
உன்னைச் சூழ ஓர் பாதுகாப்பு வளையமிடும்
உலக ஆசை உன்னை விட்டு விலகும்
உள்ளத்தில் தானாக நிம்மதி படரும்
உனக்குள்ளே ஓர் தேடல் தொடங்கும்
உன்னைச் சுற்றிய இருள் வட்டம் மறையும்
உன் பிறப்பின் அர்த்தம் புரியும்
ஸுஜூதுகளின் சுவை உணர்வாய்
உள்ளத்தில் இறையச்சம் கூடும்
உனையறியாமலே கண்ணீர் வரும்
உரிய நேரத்தில் தொழத் தோன்றும்
தொழுகைக்காக காத்திருப்புகள் தொடரும்
அவனுடனான தனிமையை மனம் நாடும்
அந்தரங்கம் யாவும் அவனுடனே பகிரப்படும்
சோதனைகள் ஒன்றன் பின் ஒன்றாய்
உன்னை சூழ்ந்து கொள்ளும்
அந்த வலியிலும் நீ சுகமே காண்பாய்
உனக்குள்ளே பக்குவம் துளிர்விடும்
பாவக்கறை நீங்குவதாய் உணர்வாய்
அனைத்தையும் பொறுத்துக்கொள்வாய்!
உடனுக்குடனே இல்லையென்றாலும்
பொறுமைக்குரிய வெகுமதி காண்பாய்
நரக சுவாலைக்கும் உனக்குமிடையில்
உறுதியான தடுப்புச்சுவர் எழுப்பப்படும்
சுவன வாசல் உனக்காய் திறந்தே காத்திருக்கும்
முகம் பிரகாசிக்கும்
கண்களில் ஆனந்தம் ஜொலிக்கும்
இதயத்தில் அமைதி குடிகொள்ளும்
வார்த்தைகளில் மென்மை உதிரும்
நடத்தைகளில் நளினம் இருக்கும்
கண்ணியம் உன்னைத் தேடிவரும்
மகிழ்ச்சியில் திளைக்கும் போது
வல்ல நாயனையே துதித்திடுவாய்
கவலையில் பதறும் போது
கருணையாளனையே சிரம் பணிவாய்
வேதனைகளை இறை நேசம் என்பாய்..
சோதனைகளை இறையருளாய் ஏற்பாய்!
உன் ஒவ்வொரு அசைவையும்
படைத்தவன் அவதானிப்பதாய் உணர்வாய்...
தண்டனைகளுக்கு மனம் அஞ்சும்
தவறுகளை தவிர்த்திட தோன்றும்
இச்சைகள் உனக்குக் கட்டுப்படும்
மனம் உனக்கு வசப்படும்
மணித்துளிகளின் மகிமை புரியும்
திக்ருகளில் நாவு நனையும்
குர்ஆன் திலாவத்தில் நெஞ்சம் நிறையும்
மரணத்தை மனம் அடிக்கடி நினைக்கும்
மறுமையின் நிகழ்வுகள் நெஞ்சைப் பிசையும்
மண்ணறை இருள் கனவிலும் வரும்
பரிதவித்து பதறி எழுவாய்
இரவின் நிசப்த ஏகாந்தத்தில்
கீழ் வானம் இறங்கி வந்து
கொடுக்கத் தயாராய் காத்திருக்கும்
மன்னிப்பளிப்பவன் முன் மண்டியிட்டு
நம்பிக்கையோடும் பயபக்தியோடும்
மனமுறுகி நீ வடிக்கும்
கண்ணீர்த்துளிகளே போதும்
வார்த்தைகள் அங்கு தேவையில்லை
துன்பங்கள் எல்லாம் துரும்பாகிவிடும்!
ஷைத்தானிய பண்புகள் உன்னை விட்டு
வெகுதூரம் விலகி விடும்
ஷைத்தான் உன்னைக் கண்டு
வெட்கித்து தலைகுனிந்து
வெருண்டோடி விடுவான்
இறைவசனங்களை படிக்கும் போது
இயல்பாய் இறையச்சம் பெருக்கெடுக்கும்
நன்மாராய வசனங்களில் உடல் சிலிர்த்து
உவகையில் உள்ளம் பூரிக்கும்
எச்சரிக்கை வரிகளில் பயம் தொற்றிக்கொள்ளும்
இதயம் நடுநடுங்கி கண்ணீர் வரும்
வாழ்வில் இருப்பவைகளுக்கும் - நீ
இழந்தவைகளுக்கும் அர்த்தங்கள் புலப்படும்
நினைத்தவைகள் ஒவ்வொன்றாய்
நிறைவேறிடும் சந்தர்ப்பங்களில்
பாசமுள்ள ரஹ்மானை இறுகத் தழுவி
நன்றி கூறிடனும் என்று மனம் தவிக்கும்
மனநிம்மதியுடனான மனமகிழ்ச்சி
மட்டிட முடியாத ஆத்ம திருப்தி
இனம் புரியாத இன்பப் பரவசம்
அனைத்தும் உனக்குள் தானாய் நிலைபெறும்
என்ன காரணத்துக்காக படைக்கப்பட்டோம்
என்ற புரியாத ஓர் புதிருக்கு
புதிதாய் சரியான விடை கிடைக்கும்!
அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை
உன் நாவில் அடிக்கடி உச்சரிக்கப்படும்
படைத்தவனை சந்திக்கும் அந்த
பேரின்பப் பொழுதை எதிர்ப்பார்த்து
நெஞ்சம் ஏக்கத்துடன் காத்திருக்கும்!
படைத்தவனைக் காதலித்துப் பார்...
இன்ஷா அல்லாஹ்
உனக்குள்ளே பல மாறுதல் தோன்றும்
உன்னைச் சூழ ஓர் பாதுகாப்பு வளையமிடும்
உலக ஆசை உன்னை விட்டு விலகும்
உள்ளத்தில் தானாக நிம்மதி படரும்
உனக்குள்ளே ஓர் தேடல் தொடங்கும்
உன்னைச் சுற்றிய இருள் வட்டம் மறையும்
உன் பிறப்பின் அர்த்தம் புரியும்
ஸுஜூதுகளின் சுவை உணர்வாய்
உள்ளத்தில் இறையச்சம் கூடும்
உனையறியாமலே கண்ணீர் வரும்
உரிய நேரத்தில் தொழத் தோன்றும்
தொழுகைக்காக காத்திருப்புகள் தொடரும்
அவனுடனான தனிமையை மனம் நாடும்
அந்தரங்கம் யாவும் அவனுடனே பகிரப்படும்
சோதனைகள் ஒன்றன் பின் ஒன்றாய்
உன்னை சூழ்ந்து கொள்ளும்
அந்த வலியிலும் நீ சுகமே காண்பாய்
உனக்குள்ளே பக்குவம் துளிர்விடும்
பாவக்கறை நீங்குவதாய் உணர்வாய்
அனைத்தையும் பொறுத்துக்கொள்வாய்!
உடனுக்குடனே இல்லையென்றாலும்
பொறுமைக்குரிய வெகுமதி காண்பாய்
நரக சுவாலைக்கும் உனக்குமிடையில்
உறுதியான தடுப்புச்சுவர் எழுப்பப்படும்
சுவன வாசல் உனக்காய் திறந்தே காத்திருக்கும்
முகம் பிரகாசிக்கும்
கண்களில் ஆனந்தம் ஜொலிக்கும்
இதயத்தில் அமைதி குடிகொள்ளும்
வார்த்தைகளில் மென்மை உதிரும்
நடத்தைகளில் நளினம் இருக்கும்
கண்ணியம் உன்னைத் தேடிவரும்
மகிழ்ச்சியில் திளைக்கும் போது
வல்ல நாயனையே துதித்திடுவாய்
கவலையில் பதறும் போது
கருணையாளனையே சிரம் பணிவாய்
வேதனைகளை இறை நேசம் என்பாய்..
சோதனைகளை இறையருளாய் ஏற்பாய்!
உன் ஒவ்வொரு அசைவையும்
படைத்தவன் அவதானிப்பதாய் உணர்வாய்...
தண்டனைகளுக்கு மனம் அஞ்சும்
தவறுகளை தவிர்த்திட தோன்றும்
இச்சைகள் உனக்குக் கட்டுப்படும்
மனம் உனக்கு வசப்படும்
மணித்துளிகளின் மகிமை புரியும்
திக்ருகளில் நாவு நனையும்
குர்ஆன் திலாவத்தில் நெஞ்சம் நிறையும்
மரணத்தை மனம் அடிக்கடி நினைக்கும்
மறுமையின் நிகழ்வுகள் நெஞ்சைப் பிசையும்
மண்ணறை இருள் கனவிலும் வரும்
பரிதவித்து பதறி எழுவாய்
இரவின் நிசப்த ஏகாந்தத்தில்
கீழ் வானம் இறங்கி வந்து
கொடுக்கத் தயாராய் காத்திருக்கும்
மன்னிப்பளிப்பவன் முன் மண்டியிட்டு
நம்பிக்கையோடும் பயபக்தியோடும்
மனமுறுகி நீ வடிக்கும்
கண்ணீர்த்துளிகளே போதும்
வார்த்தைகள் அங்கு தேவையில்லை
துன்பங்கள் எல்லாம் துரும்பாகிவிடும்!
ஷைத்தானிய பண்புகள் உன்னை விட்டு
வெகுதூரம் விலகி விடும்
ஷைத்தான் உன்னைக் கண்டு
வெட்கித்து தலைகுனிந்து
வெருண்டோடி விடுவான்
இறைவசனங்களை படிக்கும் போது
இயல்பாய் இறையச்சம் பெருக்கெடுக்கும்
நன்மாராய வசனங்களில் உடல் சிலிர்த்து
உவகையில் உள்ளம் பூரிக்கும்
எச்சரிக்கை வரிகளில் பயம் தொற்றிக்கொள்ளும்
இதயம் நடுநடுங்கி கண்ணீர் வரும்
வாழ்வில் இருப்பவைகளுக்கும் - நீ
இழந்தவைகளுக்கும் அர்த்தங்கள் புலப்படும்
நினைத்தவைகள் ஒவ்வொன்றாய்
நிறைவேறிடும் சந்தர்ப்பங்களில்
பாசமுள்ள ரஹ்மானை இறுகத் தழுவி
நன்றி கூறிடனும் என்று மனம் தவிக்கும்
மனநிம்மதியுடனான மனமகிழ்ச்சி
மட்டிட முடியாத ஆத்ம திருப்தி
இனம் புரியாத இன்பப் பரவசம்
அனைத்தும் உனக்குள் தானாய் நிலைபெறும்
என்ன காரணத்துக்காக படைக்கப்பட்டோம்
என்ற புரியாத ஓர் புதிருக்கு
புதிதாய் சரியான விடை கிடைக்கும்!
அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை
உன் நாவில் அடிக்கடி உச்சரிக்கப்படும்
படைத்தவனை சந்திக்கும் அந்த
பேரின்பப் பொழுதை எதிர்ப்பார்த்து
நெஞ்சம் ஏக்கத்துடன் காத்திருக்கும்!
படைத்தவனைக் காதலித்துப் பார்...
இன்ஷா அல்லாஹ்
0 comments:
Post a Comment