
பதிவு செய்த நேரம்:2017-01-01 15:04:56
லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ஷிவ்பால் யாதவ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இதனால் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ராம்கோபால் யாதவ் 6 ஆண்டுகளுக்கு மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்டார். நேற்றுமுன் தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் அதிகாரச் சண்டை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பா சிவ்பால் யாதவுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இதனால் சமீபத்தில் சிவ்பால் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் அகிலேஷ்.
இருவருக்கும் இடையேயான பனிப்போர் தீவிரமடைந்ததால், கட்சி தலைவர் முலாயம் தலையிட்டு பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கண்டார். தம்பியை சமாதானப்படுத்த அகிலேஷிடமிருந்து மாநில தலைவர் பதவியை பறித்து, சிவ்பால் யாதவிடம் வழங்கினார். இந்நிலையில், அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக மாநில தலைவர் என்ற முறையில் சிவ்பால் யாதவ் வேட்பாளர் பட்டியலை தயாரித்து முலாயமிடம் வழங்கினார். முலாயமும் சிவ்பாலும் ஆலோசித்து 403 தொகுதிகளில் 325 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்தனர்.
இதில் அகிலேஷ் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என 50 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதே நேரத்தில் அகிலேஷ் நீக்கிய அமைச்சர்களின் பெயர், வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக அகிலேஷ் முலாயமை சந்தித்து அதிருப்தியை வெளியிட்டார். அதே நேரத்தில் 235 போட்டி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு அகிலேஷ் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடியாக சிவ்பால் யாதவும், 78 பேர் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இதனால், குடும்ப சண்டை உச்சக்கட்டத்தை எட்டியது. இதையடுத்து அகிலேஷை ஆதரித்து வரும் கட்சியின் பொதுச் செயலாளரும், அவரது சித்தப்பாவுமான ராம்கோபால் யாதவ் அகிலேஷ் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இது கட்சி தலைவர் முலாயமுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், ‘முதல்வர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என விளக்கம் கேட்டு அகிலேஷ் மற்றும் ராம்கோபால் யாதவுக்கு நோட்டீஸ் விடுத்தார்.
அதே நேரத்தில், கட்சி விதிமுறை மீறி ஒழுங்கின்றி நடந்து கொண்டததற்காகவும், கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி, முதல்வர் அகிலேஷ் யாதவையும், பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவையும் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்குவதாக முலாயம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் நலன் கருதி இந்த நடவடிக்கையை தாம் எடுத்ததாகவும் கூறினார். இந்நிலையில் நேற்று முதல்வர் அகிலேஷ் யாதவையும், பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவையும் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்குவதாக வெளியிட்ட அறிவிப்பை முலாயம் சிங் திடீரென வாபஸ் பெற்றார்.
இதனையடுத்து இன்று லக்னோவில் அகிலேஷ் யாதவ் தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ஷிவ்பால் யாதவ் நீக்கபட்டுள்ளார். மேலும் மேலும் கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ஷிவ்பால் யாதவ் நீக்கப்பட்டது உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த செயற்குழுக் கூட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் அறிவித்துள்ளார்.
மேலும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ராம்கோபால் யாதவ் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து முலாயம் சிங் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நேற்றுமுன் தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் உத்திரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் உச்சக்கட்ட குழப்பம் இருந்து வருகிறது.
விரைவில் தேர்தல்
403 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் சமாஜ்வாடியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் பாஜ, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. மேலும், உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி 4ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதனால், முதல்வர் அகிலேஷை கட்சி நீக்கினாலும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எம்எல்ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபித்து, அவர்களை கவர்னர் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். அதன்பின்னர் கவர்னர் அதுகுறித்து முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். இதற்கு இடையில், நீதிமன்றத்தை நாடவும் அகிலேஷூக்கு வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் முடியும் வரை அகிலேஷ் முதல்வர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் இருக்காது என்றே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மோதலுக்கான காரணம்
சிவ்பால் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களில் 44 பேர் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ததையே அகிலேஷ் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதுவே மோதலுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், தன்னை காட்டிலும் சித்தப்பா சிவ்பாலுக்கு முலாயம் அதிக ஆதரவாக செயல்பட்டு வருவதும் அகிலேஷுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையேயான பனிப்போர் தீவிரமடைந்ததால், கட்சி தலைவர் முலாயம் தலையிட்டு பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கண்டார். தம்பியை சமாதானப்படுத்த அகிலேஷிடமிருந்து மாநில தலைவர் பதவியை பறித்து, சிவ்பால் யாதவிடம் வழங்கினார். இந்நிலையில், அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக மாநில தலைவர் என்ற முறையில் சிவ்பால் யாதவ் வேட்பாளர் பட்டியலை தயாரித்து முலாயமிடம் வழங்கினார். முலாயமும் சிவ்பாலும் ஆலோசித்து 403 தொகுதிகளில் 325 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்தனர்.
இதில் அகிலேஷ் ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் என 50 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதே நேரத்தில் அகிலேஷ் நீக்கிய அமைச்சர்களின் பெயர், வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக அகிலேஷ் முலாயமை சந்தித்து அதிருப்தியை வெளியிட்டார். அதே நேரத்தில் 235 போட்டி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு அகிலேஷ் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பதிலடியாக சிவ்பால் யாதவும், 78 பேர் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இதனால், குடும்ப சண்டை உச்சக்கட்டத்தை எட்டியது. இதையடுத்து அகிலேஷை ஆதரித்து வரும் கட்சியின் பொதுச் செயலாளரும், அவரது சித்தப்பாவுமான ராம்கோபால் யாதவ் அகிலேஷ் ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இது கட்சி தலைவர் முலாயமுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால், ‘முதல்வர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என விளக்கம் கேட்டு அகிலேஷ் மற்றும் ராம்கோபால் யாதவுக்கு நோட்டீஸ் விடுத்தார்.
அதே நேரத்தில், கட்சி விதிமுறை மீறி ஒழுங்கின்றி நடந்து கொண்டததற்காகவும், கட்சியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி, முதல்வர் அகிலேஷ் யாதவையும், பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவையும் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்குவதாக முலாயம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். கட்சியின் நலன் கருதி இந்த நடவடிக்கையை தாம் எடுத்ததாகவும் கூறினார். இந்நிலையில் நேற்று முதல்வர் அகிலேஷ் யாதவையும், பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவையும் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்குவதாக வெளியிட்ட அறிவிப்பை முலாயம் சிங் திடீரென வாபஸ் பெற்றார்.
இதனையடுத்து இன்று லக்னோவில் அகிலேஷ் யாதவ் தலைமையில் அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ஷிவ்பால் யாதவ் நீக்கபட்டுள்ளார். மேலும் மேலும் கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ஷிவ்பால் யாதவ் நீக்கப்பட்டது உத்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த செயற்குழுக் கூட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் அறிவித்துள்ளார்.
மேலும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ராம்கோபால் யாதவ் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து முலாயம் சிங் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நேற்றுமுன் தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் உத்திரபிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் உச்சக்கட்ட குழப்பம் இருந்து வருகிறது.
விரைவில் தேர்தல்
403 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் சமாஜ்வாடியில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் பாஜ, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. மேலும், உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி 4ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதனால், முதல்வர் அகிலேஷை கட்சி நீக்கினாலும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எம்எல்ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபித்து, அவர்களை கவர்னர் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். அதன்பின்னர் கவர்னர் அதுகுறித்து முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். இதற்கு இடையில், நீதிமன்றத்தை நாடவும் அகிலேஷூக்கு வாய்ப்புள்ளது. இதனால் தேர்தல் முடியும் வரை அகிலேஷ் முதல்வர் பதவியில் நீடிப்பதில் சிக்கல் இருக்காது என்றே அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மோதலுக்கான காரணம்
சிவ்பால் தேர்ந்தெடுத்த வேட்பாளர்களில் 44 பேர் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ததையே அகிலேஷ் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதுவே மோதலுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், தன்னை காட்டிலும் சித்தப்பா சிவ்பாலுக்கு முலாயம் அதிக ஆதரவாக செயல்பட்டு வருவதும் அகிலேஷுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment