Thursday, December 15, 2016

Filled Under:

*மரணம் வரை மனைவி*

*🌺🌻🌹🌼


*மரணம் வரை மனைவி*

●ஓர் நாள் இரவு நேரத்தில்
  ஒரு ஏழை விவசாயி
  தன் வேலைகளை எல்லாம்
  முடித்து விட்டு
  உறங்கிக் கொண்டிருந்தான்..

 ●அப்போது அவன் கனவில்
  கையில் கரும்பலகையுடன்
  கடவுள் வந்தார்..
 
●"இந்த கரும்பலகையில்,
  உனக்கு தெரிந்த முப்பது
  உறவுமுறைகளின்
  பெயர்களை எழுது" என்றார்..

●அந்த விவசாயும்,
  "அப்பா, அம்மா ,
  தாத்தா , பாட்டி ,
  மனைவி , மகன் , மகள் ,
  அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி ,
  சித்தப்பா , சித்தி , மாமா , அத்தை ,
  காதலி , நண்பன்" என
  முப்பது பேர் பெயரை எழுதினான்..

●அப்பொழுது கடவுள்,
  "கண்டிப்பாக இதில் நீ
  இரண்டு பேர் பெயரை
  அழிக்க வேண்டும்.,
  நீ யாரை இழக்க முடியும்
  என்று நினைக்கிறாயோ,
  அந்தப் பெயரை அழி" என்றார்..

●சற்று யோசித்த விவசாயி,
  காதலி , நண்பன் என
  இரண்டு பேர் பெயரை அழித்தான்..

●கடவுள் மறுபடியும்,
  "இன்னும் இரண்டு பேர்
  பெயரை அழி" என்றார்..

●விவசாயும்
  கொஞ்ச நேரத்தில்,
  "மாமா ,  அத்தை" என
  இரண்டு பேர் பெயரை அழித்தான்..

●விவசாயி இப்படியே,
  இரண்டு இரண்டு பேர்
  பெயராக அழித்தான்..

●கடைசியாக
  அப்பா , அம்மா ,
  மனைவி , மகன் , மகள் என
  இவர்கள் பெயர் மட்டுமே இருந்தது..

●கடவுள்,
  "இதிலிருந்தும் இரண்டு பேர் பெயரை
  நீக்க வேண்டும்.,
  நீ யார் பெயரை நீக்குவாய்?" என்றார்..

●விவசாயி வருத்தத்துடன்
  சிறிது நேரம் கழித்து,
  அப்பா , அம்மா
  பெயரை அழித்தான்..

●கடவுள் மீண்டும்,
  "இன்னும் இரண்டு பேர் பெயரை
  அழிக்க வேண்டும்" என்றார்..

●கடவுளுக்கு சற்று
  எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது..
  "அடுத்ததாக இவன் யார் பெயரை
  அழிக்கப்போகிறான்?" என்று..

●அப்போது விவசாயி,
  மிகுந்த சோகத்துடனும்
  மன வேதனையுடனும்
  மகன் , மகள் பெயரை அழித்தான்..

●கடைசியாக கரும்பலகையில்,
  "மனைவி" பெயர் மட்டும் இருந்தது..

●கடவுள் ஆச்சரியமுடனும்
  ஆவலுடனும் கேட்டார்..
 
●"மகன், மகள் பெயரை அழித்து விட்டு
  எதற்காக மனைவி பெயரை
  அழிக்கவில்லை?" என்று..

●அதற்கு விவசாயி,
  "மகள் எப்படியும்
  இன்னொரு வீட்டுக்கு
  வாழப் போய் விடுவாள்..

●மகன்,
  அவனும் அவனுடைய
  மனைவி குழந்தை என வாழ்வான்..

●கடைசி காலம் வரை
  என்னோடு வாழக் கூடியவள்
  #என்_மனைவி மட்டும் தான்" என்றான்..

●விவசாயின் பதிலைக் கேட்டு
  வியந்து போன கடவுள்,
  அவன் வேண்டிய வரத்தையெல்லாம்
  கொடுத்துவிட்டு சென்றாராம்..
 

[ நம்முடைய
  வாழ்க்கைத் துணையாக
  நாம் இறக்கும் வரை
  நம்முடன் வரக்கூடிய
  நம்மோடு வாழக்கூடிய🏻
  ஒரே உறவு,
  மனைவி மட்டும் தான்..

  *மனைவியை மதிப்போம்.,*
  *மகிழ்வுடன் வாழ்வோம்.... ]*

0 comments:

Post a Comment