பிராட்பேண்ட் மூலம் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்கும் வி-ஃபைபர் திட்டத்தினை ஏர்டெல் நிறுவனம் மும்பையில் இன்று துவங்கியுள்ளது.

மும்பை:
அதிவேக இண்டர்நெட் இணைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் ஏர்டெல் நிறுவனம் வி-ஃபைபர் சேவையினை வழங்கி வருகிறது. முதற்கட்டமாக சென்னையில் வழங்கப்பட்ட வி-ஃபைபர் சேவையானது அதன் பின் பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பிராட்பேண்ட் மூலம் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்கும் வி-ஃபைபர் திட்டத்தினை ஏர்டெல் நிறுவனம் மும்பையில் இன்று துவங்கியுள்ளது.
ஏர்டெல் வி-ஃபைபர் திட்டத்தின் மூலம் பிராட்பேண்ட் லைன் பயன்படுத்தி நொடிக்கு 100எம்பி என்ற இண்டர்நெட் வேகம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் பிராட்பேண்ட் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. எனினும் புதிய மோடெம் வாங்க கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஏர்டெல் வி-ஃபைபர் திட்டத்தை பயன்படுத்தும் மோடெம்களின் விலையை ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் வரை அறிவிக்கவில்லை. இத்துடன் ஒரு மாதம் வி-ஃபைபர் திட்டத்தை பயன்டுத்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையில் திருப்தி கொள்ளவில்லை எனில் மோடெம் கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்பட்டு விடும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களும், புதிய வாடிக்கையாளர்களும் புதிய திட்டத்திற்கு பதிவு செய்யலாம்.
வி-ஃபைபர் திட்டங்களின் விலை தற்சமயம் ரூ.899 முதல் துவங்குகிறது. இத்துடன் புதிய வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு வரம்பற்ற இணைய சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய இணைய சேவையை அணுக சாலைகளில் எவ்வித துளையிடும் அவசியமும் கிடையாது மாறாக சத்தம் நீக்கும் தொழில்நுட்பம் மூலம் இணைப்புகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக இண்டர்நெட் இணைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் ஏர்டெல் நிறுவனம் வி-ஃபைபர் சேவையினை வழங்கி வருகிறது. முதற்கட்டமாக சென்னையில் வழங்கப்பட்ட வி-ஃபைபர் சேவையானது அதன் பின் பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பிராட்பேண்ட் மூலம் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்கும் வி-ஃபைபர் திட்டத்தினை ஏர்டெல் நிறுவனம் மும்பையில் இன்று துவங்கியுள்ளது.
ஏர்டெல் வி-ஃபைபர் திட்டத்தின் மூலம் பிராட்பேண்ட் லைன் பயன்படுத்தி நொடிக்கு 100எம்பி என்ற இண்டர்நெட் வேகம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் பிராட்பேண்ட் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. எனினும் புதிய மோடெம் வாங்க கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஏர்டெல் வி-ஃபைபர் திட்டத்தை பயன்படுத்தும் மோடெம்களின் விலையை ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் வரை அறிவிக்கவில்லை. இத்துடன் ஒரு மாதம் வி-ஃபைபர் திட்டத்தை பயன்டுத்திய வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவையில் திருப்தி கொள்ளவில்லை எனில் மோடெம் கட்டணம் முழுமையாக திரும்ப வழங்கப்பட்டு விடும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களும், புதிய வாடிக்கையாளர்களும் புதிய திட்டத்திற்கு பதிவு செய்யலாம்.
வி-ஃபைபர் திட்டங்களின் விலை தற்சமயம் ரூ.899 முதல் துவங்குகிறது. இத்துடன் புதிய வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு வரம்பற்ற இணைய சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய இணைய சேவையை அணுக சாலைகளில் எவ்வித துளையிடும் அவசியமும் கிடையாது மாறாக சத்தம் நீக்கும் தொழில்நுட்பம் மூலம் இணைப்புகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment