சான்றோர் பாடசாலை : அமர்வு 51
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் “கிதாபுஸ் ஸுஹத்” இல் இருந்து.
1494 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا ضَمْرَةُ عَنِ ابْنِ شَوْذَبٍ قَالَ كَانَ مَالِكُ بْنُ دِينَارٍ يُكْثِرُ أَنْ يَقُولَ لَوْ كَانَ طَيْلَسَانُ بَكْرٍ فَقَالَ الْحَسَنُ إِنَّكَ قَدْ أَكْثَرْتَ فِي طَيْلَسَانِ بَكْرٍ فَلَأَنَا عَلَيْكَ فِي عَبَاءَتِكَ أَخْوَفُ مِنِّي عَلَى بَكْرٍ فِي طَيْلَسَانِهِ " (51)
பக்ர் உடைய ஷால் (மேலே போர்த்துவதற்கு போடப்படும் அல்லது புஜத்தின் மீது போடப்படும் ஒரு வகைத் துணி) இருந்தால் நன்றாக இருக்குமே என்று மாலிக் இப்னு தீனார் அதிகம் கூறுவார். அதற்கு ஹசன் பஸரி கூறினார்கள். நீங்கள் பக்ர் உடைய ஷாலைப் பற்றி அதிகம் கூறுகிறீர்கள். பக்ர் உடைய ஷாலினால் அவருக்கு ஏற்படும் நிலையை நினைத்து நான் பயப்படுவதை விட உங்களது “அபா”வினால் உங்களுக்கு ஏற்படும் நிலையை நினைத்து நான் பயப்படுகின்றேன். (அபா – மேலாடைக்கு மேல் அணியப்படும் ஒருவகை ஆடை)
கருத்து: மாலிக் இப்னு தீனார் ரஹிமஹுல்லாஹ் உலக பற்றில்லாத நல்லோரில் ஒருவராக இருந்தார். அத்துடன் ஹதீஸ்கலை அறிஞராகவும் இருந்தார். வணக்க வழிபாட்டில் அதிக ஈடுபாடு உள்ளவராகவும் உலக விஷயங்களை விட்டு விலகியவராகவும் இருந்தார். பக்ர் என்ற ஸாஹிது பயன்படுத்திய ஒரு ஷாலை பார்த்து அது போன்ற ஒரு ஷால் இருந்தால் நல்லதாக இருக்குமே! என்று அதிகம் சொல்லிக்கொண்டு இருந்தார்.
தன்னை பிறரை விட்டும் மறைத்துக் கொள்வதற்கும் எல்லா தேவைகளுக்கும் பயன்படும்படியாக ஒரே ஒரு ஷால் மட்டும் இருந்தாலே எனக்கு போதுமானதாக இருக்குமே! இந்த ஆடைகளை பராமரிப்பது போன்ற சிரமங்கள் எனக்கு இருக்காதே! என்று மாலிக் இப்னு தீனார் ஏங்குவார்கள்.
அப்போது ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த கூற்றை கூறினார்கள்.
“அதாவது, எனக்கு உங்கள் இருவரின் மீதும் பயமாக இருக்கிறது. எனினும் உங்கள் மீது அதிக பயமாக இருக்கிறது. ஏனெனில் நீங்கள் உலக பற்றின்மைக்கு ஓர் ஆடையை ஒரு அளவுகோலாக ஆக்கிவிட்டீர்கள். உங்களது அபாவை விட பக்ர் உடைய ஷால் நல்லது என்று கூறுகிறீர்கள்.
இப்படி உலக பற்றில்லாமல் இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட ஆடையைத்தான் அணிய வேண்டும் என்று யார் சொன்னது? அப்படி ஒரு குறிப்பிட்ட ஆடையை மட்டும் அணிவதால் பிறகு சில காலங்கள் கழித்து அதில் முகஸ்துதி வருவதற்கும் வாய்ப்பு உண்டல்லவா!?.
பணிவான ஆடை, பகட்டு இல்லாத ஆடை, வீண் விரயம் அற்ற ஆடை, ஆடம்பரமற்ற ஆடை அவசியம்தான். ஆனால், உலக பற்றின்மை என்பது ஒரு குறிப்பிட்ட ஆடையில்தான் இருக்கிறது என்று சொல்லிவிடமுடியாது. ஒருவர் உயந்த ஆடையை அணிகின்ற அதே நேரத்தில் அவரது உள்ளம் உலக மோகம் இல்லாமல் இருக்கலாம். ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆடைகளை தேர்வு செய்வதில் குற்றம் ஏதும் இல்லை. ஆனால், அதிலும் வரம்பு மீறுதல், வீண் விரயம், பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் இருத்தல் கூடாது.
மேலும், சில நேரங்களில் நல்ல வசதி உள்ள ஒருவர் மிக சாதாரண ஓர் ஆடையை அணியும் போது அவரைப் பற்றி மக்கள், “அவர் மிகப் பணிவானவர், உலக பற்றில்லாதவர்” என்று கூற ஆரம்பிப்பார்கள். பின்னர் இப்படியே மக்கள் அவரை பேசுவது அவருக்கு முகஸ்துதியை ஏற்படுத்தி விடலாம்.
சில நேரம் இப்படியும் நடக்கலாம். வசதி இருந்தும் மிக சாதரணமான ஆடையை ஒருவர் அணிந்தால், இவன் ஒரு கருமி, ஏழைகளுக்கு பயந்து, தன்னை இல்லாதவன் போன்று காட்டிக் கொள்கிறான் என்று மக்கள சொல்வார்கள்.
அவ்வாறே, வித்தியாசமான ஒரு குறிப்பிட்ட ஆடையால் ஒருவர் அறியப்படுவது அவருக்கு பெருமையையும் முகஸ்துதியையும் ஏற்படுத்தலாம்.
நீங்கள் ஸுஹ்துக்கு முக்கியத்துவம் தருவது சரிதான். ஆனால், அந்த ஸுஹ்தை ஓர் ஆடையில் மட்டும் நிறுத்திவிடாதீர்கள். ஸுஹ்துக்கு என்று குறிப்பிட்ட ஆடையை நிர்ணயித்து விடாதீர்கள். ஸுஹ்து என்பது உள்ளத்தில் இருக்க வேண்டும், அமலில் இருக்க வேண்டும், குணத்தில் இருக்க வேண்டும், எண்ணத்தில் இருக்க வேண்டும். இல்லையெனில் வெறும் ஆடையில் ஸுஹ்து சுருங்கி விடும். பிறகு, மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள் அதுபோன்ற ஆடையை உடுத்திக்கொண்டு தங்களை ‘ஸாஹித்’ உலக பற்றில்லாதவர் என்று காண்பித்து, மக்களை தன் பக்கம் கவர்ந்து மக்களின் செல்வங்களை கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். மக்களும் வெளிரங்கமான ஆடைக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்மையான ஸாஹிதுகளை விட்டும் பொய்யான ஸாஹிதுகள் பின்னால் சென்று தங்களது மார்க்கத்தையும் மறுமையையும் இழந்துவிடுவார்கள்.
இப்படித்தான் கிறிஸ்த்துவத்திலும் யூதமதத்திலும் இதர மதங்களிலும் உள்ள துறவிகள், பண்டிதர்கள்கு மற்றும் குருக்கள் வெறும் ஓர் ஆடையை அணிந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். அந்த ஒரு நிலையை இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்படுத்தி விடாதீர்கள்.”
இமாம் அவர்களின் இந்த வழிகாட்டுதல் எவ்வளவு ஆழமானது என்று கவனியுங்கள்! இன்று தங்களை சூஃபிகள், தரீக்கா வாதிகள், ஆன்மிக வாதிகள் என்று சொல்பவர்கள் பலர் இப்படித்தானே இருக்கின்றார்கள். ஒரு குறிப்பிட்ட ஆடை, குறிப்பட்ட வண்ண துண்டு, ஒரு டிசைனான தொப்பி, ஒரு வைகயான தலைப்பாகை, அதிலும் தகுதிக்கு ஏற்ப வண்ணம், வடிவம், நீளம்... என்றெல்லாம் கணக்கு வைத்திருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் பெயர்கள், பட்டங்கள், புனைப் பெயர்கள், அந்தஸ்த்துகள்...
இப்படியாக இவர்களின் பகட்டுகளும் போலித்தனங்களும் வேடிக்கையாக இருப்பதை பார்க்கிறோம். மக்களும் இந்த வண்ணங்களுக்கும் வடிவங்களுக்கும் பின்னால் அலைவதை காண்கிறோம்.
உண்மையான அறிஞர்கள், ஞானிகள், ஸாஹிதுகள் அப்படி இருக்க மாட்டார்கள்.
அவர்கள் பொதுவான கண்ணியமான ஆடையை அணிவார்கள்; அமைதியாக இருப்பார்கள்; அடக்கமாக நடந்து கொள்வார்கள். மக்களில் இருந்து தங்களை வித்தியாசப்படுத்த விரும்ப மாட்டார்கள்; இடத்திற்கு ஏற்ப தேவையான மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஆடைகளை அணிவார்கள்; குத்பா பிரசங்கம், ஈது பெருநாள்கள் மற்றும் முக்கியமான சந்திப்புகளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் விஷேசமான ஆடை அணிந்ததைப் போன்று ஆடைகள் அணிவதை விரும்புவார்கள்; அதில் குறைகாண மாட்டார்கள். மேலும், சில ஆடைகளை தங்களுக்கு மட்டும்தான், அவற்றை பிற மக்கள் அணியக்கூடாது என்று பெருமை கொள்ளமாட்டார்கள். மக்களுக்கு காட்டுவதற்காக எதையும் செய்ய மாட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய சுன்னத்தில் இல்லாத ஒன்றை தங்களுக்கு அடையாளமாக, வழக்கமாக ஆக்கிக்கொள்ள மாட்டார்கள்.
ஆம், யாருடைய உள்ளத்தில் இக்லாஸ் என்ற தூய எண்ணம் இருக்குமோ அவர்களால்தான் தங்களையும் தங்கள் அமல்களையும் மறைத்துக் கொள்ள முடியும். கடுகளவு இக்லாஸ் இருந்தாலும் அவர் தன்னையோ தனது அமலையோ வெளிப்படுத்தவே மாட்டார்; தன்னைப் பற்றியும் தனது இல்மை பற்றியும் அமலைப் பற்றியும் மக்கள் அறிவதை விரும்ப மாட்டார். மக்களால் தான் அறியப்படுவதை விட தான் அறியப்படாமல் இருப்பதையே விரும்புவார். நெருப்பு தன் உடலை தீண்டுவதை விட ‘ரியா’ தன் அமலை தீண்டுவதை பயப்படுவார். மக்களை விட தன்னை உயர்வாகவோ கண்ணியமானவரகவோ ஒரு போது கருதமாட்டார். தான் அமலிலும் ஆன்மிகத்திலும் ஒரு நிலையை அடைந்துவிட்டதாக எப்போதும் கருத மாட்டார். தன்னை குறைவுடையவராகவே எப்போதும் பார்ப்பார். தன்னில் உள்ள நிறைகளை பார்க்காமல் தனது தவறுகளையும் குறைகளையும் உற்று நோக்கி அவற்றை சீர்திருத்துவதில் கவனம் செலுத்துவார்.
இதுதான் ஒரு உண்மை முஃமினின் நிலை. இப்படித்தான் நபித்தோழர்கள் இருந்தார்கள். அவர்களின் தோழர்கள் – தாபியீன்கள் இப்படித்தான் இருந்தார்கள். அதே வழியில்தான் இன்று வரை நல்லவர்கள் பயந்தவர்களாகவே பயணித்து வருகின்றார்கள்.
நல்லவர்களைப் போல ஆடைகள் அணிகின்ற பெண்களும் ஆண்களும் மிக கவனமாக இருக்க வேண்டும்.
நல்லவர்களைப் போல பேணுதலும் நல்ல குணங்களும் நல்ல அமலும் இல்லாமல் நல்லவர்களின் ஆடையை மட்டும் அணிந்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்களா? உள்ளத்தில் தக்வாவும் செயல்களில் பேணுதலும் இல்லாமல் ஆடை என்ன பலனை கொடுத்துவிட முடியும்!?
"ஆடையால் நல்லவர்களாக தோற்றமளிக்கும் பலர் செயல்களால் தீயவர்களாக இருப்பதுண்டு."
அல்லாஹ்வே! எங்களையும் அந்த வழியில் பயணிக்க வை! இக்லாஸைத் தா! ரியாவை விட்டும் பாதுகாத்துக்கொள்! இம்மை மறுமையின் நஷ்டத்தை விட்டும் பாதுகாத்துக்கொள்! மக்களுக்கு மத்தியில் பிரபலாமாகி உனக்கு முன் கண்ணியம் இழப்பதை விட்டும் எங்களை பாதுகாத்துக்கொள்! நீ விரும்பாத எல்லா கெட்ட குணங்களை விட்டும் எங்களை பாதுகாத்துக்கொள்! ஆமீன்!!
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் “கிதாபுஸ் ஸுஹத்” இல் இருந்து.
1494 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا ضَمْرَةُ عَنِ ابْنِ شَوْذَبٍ قَالَ كَانَ مَالِكُ بْنُ دِينَارٍ يُكْثِرُ أَنْ يَقُولَ لَوْ كَانَ طَيْلَسَانُ بَكْرٍ فَقَالَ الْحَسَنُ إِنَّكَ قَدْ أَكْثَرْتَ فِي طَيْلَسَانِ بَكْرٍ فَلَأَنَا عَلَيْكَ فِي عَبَاءَتِكَ أَخْوَفُ مِنِّي عَلَى بَكْرٍ فِي طَيْلَسَانِهِ " (51)
பக்ர் உடைய ஷால் (மேலே போர்த்துவதற்கு போடப்படும் அல்லது புஜத்தின் மீது போடப்படும் ஒரு வகைத் துணி) இருந்தால் நன்றாக இருக்குமே என்று மாலிக் இப்னு தீனார் அதிகம் கூறுவார். அதற்கு ஹசன் பஸரி கூறினார்கள். நீங்கள் பக்ர் உடைய ஷாலைப் பற்றி அதிகம் கூறுகிறீர்கள். பக்ர் உடைய ஷாலினால் அவருக்கு ஏற்படும் நிலையை நினைத்து நான் பயப்படுவதை விட உங்களது “அபா”வினால் உங்களுக்கு ஏற்படும் நிலையை நினைத்து நான் பயப்படுகின்றேன். (அபா – மேலாடைக்கு மேல் அணியப்படும் ஒருவகை ஆடை)
கருத்து: மாலிக் இப்னு தீனார் ரஹிமஹுல்லாஹ் உலக பற்றில்லாத நல்லோரில் ஒருவராக இருந்தார். அத்துடன் ஹதீஸ்கலை அறிஞராகவும் இருந்தார். வணக்க வழிபாட்டில் அதிக ஈடுபாடு உள்ளவராகவும் உலக விஷயங்களை விட்டு விலகியவராகவும் இருந்தார். பக்ர் என்ற ஸாஹிது பயன்படுத்திய ஒரு ஷாலை பார்த்து அது போன்ற ஒரு ஷால் இருந்தால் நல்லதாக இருக்குமே! என்று அதிகம் சொல்லிக்கொண்டு இருந்தார்.
தன்னை பிறரை விட்டும் மறைத்துக் கொள்வதற்கும் எல்லா தேவைகளுக்கும் பயன்படும்படியாக ஒரே ஒரு ஷால் மட்டும் இருந்தாலே எனக்கு போதுமானதாக இருக்குமே! இந்த ஆடைகளை பராமரிப்பது போன்ற சிரமங்கள் எனக்கு இருக்காதே! என்று மாலிக் இப்னு தீனார் ஏங்குவார்கள்.
அப்போது ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த கூற்றை கூறினார்கள்.
“அதாவது, எனக்கு உங்கள் இருவரின் மீதும் பயமாக இருக்கிறது. எனினும் உங்கள் மீது அதிக பயமாக இருக்கிறது. ஏனெனில் நீங்கள் உலக பற்றின்மைக்கு ஓர் ஆடையை ஒரு அளவுகோலாக ஆக்கிவிட்டீர்கள். உங்களது அபாவை விட பக்ர் உடைய ஷால் நல்லது என்று கூறுகிறீர்கள்.
இப்படி உலக பற்றில்லாமல் இருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட ஆடையைத்தான் அணிய வேண்டும் என்று யார் சொன்னது? அப்படி ஒரு குறிப்பிட்ட ஆடையை மட்டும் அணிவதால் பிறகு சில காலங்கள் கழித்து அதில் முகஸ்துதி வருவதற்கும் வாய்ப்பு உண்டல்லவா!?.
பணிவான ஆடை, பகட்டு இல்லாத ஆடை, வீண் விரயம் அற்ற ஆடை, ஆடம்பரமற்ற ஆடை அவசியம்தான். ஆனால், உலக பற்றின்மை என்பது ஒரு குறிப்பிட்ட ஆடையில்தான் இருக்கிறது என்று சொல்லிவிடமுடியாது. ஒருவர் உயந்த ஆடையை அணிகின்ற அதே நேரத்தில் அவரது உள்ளம் உலக மோகம் இல்லாமல் இருக்கலாம். ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆடைகளை தேர்வு செய்வதில் குற்றம் ஏதும் இல்லை. ஆனால், அதிலும் வரம்பு மீறுதல், வீண் விரயம், பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் இருத்தல் கூடாது.
மேலும், சில நேரங்களில் நல்ல வசதி உள்ள ஒருவர் மிக சாதாரண ஓர் ஆடையை அணியும் போது அவரைப் பற்றி மக்கள், “அவர் மிகப் பணிவானவர், உலக பற்றில்லாதவர்” என்று கூற ஆரம்பிப்பார்கள். பின்னர் இப்படியே மக்கள் அவரை பேசுவது அவருக்கு முகஸ்துதியை ஏற்படுத்தி விடலாம்.
சில நேரம் இப்படியும் நடக்கலாம். வசதி இருந்தும் மிக சாதரணமான ஆடையை ஒருவர் அணிந்தால், இவன் ஒரு கருமி, ஏழைகளுக்கு பயந்து, தன்னை இல்லாதவன் போன்று காட்டிக் கொள்கிறான் என்று மக்கள சொல்வார்கள்.
அவ்வாறே, வித்தியாசமான ஒரு குறிப்பிட்ட ஆடையால் ஒருவர் அறியப்படுவது அவருக்கு பெருமையையும் முகஸ்துதியையும் ஏற்படுத்தலாம்.
நீங்கள் ஸுஹ்துக்கு முக்கியத்துவம் தருவது சரிதான். ஆனால், அந்த ஸுஹ்தை ஓர் ஆடையில் மட்டும் நிறுத்திவிடாதீர்கள். ஸுஹ்துக்கு என்று குறிப்பிட்ட ஆடையை நிர்ணயித்து விடாதீர்கள். ஸுஹ்து என்பது உள்ளத்தில் இருக்க வேண்டும், அமலில் இருக்க வேண்டும், குணத்தில் இருக்க வேண்டும், எண்ணத்தில் இருக்க வேண்டும். இல்லையெனில் வெறும் ஆடையில் ஸுஹ்து சுருங்கி விடும். பிறகு, மக்களை ஏமாற்ற நினைப்பவர்கள் அதுபோன்ற ஆடையை உடுத்திக்கொண்டு தங்களை ‘ஸாஹித்’ உலக பற்றில்லாதவர் என்று காண்பித்து, மக்களை தன் பக்கம் கவர்ந்து மக்களின் செல்வங்களை கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். மக்களும் வெளிரங்கமான ஆடைக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்மையான ஸாஹிதுகளை விட்டும் பொய்யான ஸாஹிதுகள் பின்னால் சென்று தங்களது மார்க்கத்தையும் மறுமையையும் இழந்துவிடுவார்கள்.
இப்படித்தான் கிறிஸ்த்துவத்திலும் யூதமதத்திலும் இதர மதங்களிலும் உள்ள துறவிகள், பண்டிதர்கள்கு மற்றும் குருக்கள் வெறும் ஓர் ஆடையை அணிந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். அந்த ஒரு நிலையை இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்படுத்தி விடாதீர்கள்.”
இமாம் அவர்களின் இந்த வழிகாட்டுதல் எவ்வளவு ஆழமானது என்று கவனியுங்கள்! இன்று தங்களை சூஃபிகள், தரீக்கா வாதிகள், ஆன்மிக வாதிகள் என்று சொல்பவர்கள் பலர் இப்படித்தானே இருக்கின்றார்கள். ஒரு குறிப்பிட்ட ஆடை, குறிப்பட்ட வண்ண துண்டு, ஒரு டிசைனான தொப்பி, ஒரு வைகயான தலைப்பாகை, அதிலும் தகுதிக்கு ஏற்ப வண்ணம், வடிவம், நீளம்... என்றெல்லாம் கணக்கு வைத்திருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் பெயர்கள், பட்டங்கள், புனைப் பெயர்கள், அந்தஸ்த்துகள்...
இப்படியாக இவர்களின் பகட்டுகளும் போலித்தனங்களும் வேடிக்கையாக இருப்பதை பார்க்கிறோம். மக்களும் இந்த வண்ணங்களுக்கும் வடிவங்களுக்கும் பின்னால் அலைவதை காண்கிறோம்.
உண்மையான அறிஞர்கள், ஞானிகள், ஸாஹிதுகள் அப்படி இருக்க மாட்டார்கள்.
அவர்கள் பொதுவான கண்ணியமான ஆடையை அணிவார்கள்; அமைதியாக இருப்பார்கள்; அடக்கமாக நடந்து கொள்வார்கள். மக்களில் இருந்து தங்களை வித்தியாசப்படுத்த விரும்ப மாட்டார்கள்; இடத்திற்கு ஏற்ப தேவையான மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஆடைகளை அணிவார்கள்; குத்பா பிரசங்கம், ஈது பெருநாள்கள் மற்றும் முக்கியமான சந்திப்புகளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் விஷேசமான ஆடை அணிந்ததைப் போன்று ஆடைகள் அணிவதை விரும்புவார்கள்; அதில் குறைகாண மாட்டார்கள். மேலும், சில ஆடைகளை தங்களுக்கு மட்டும்தான், அவற்றை பிற மக்கள் அணியக்கூடாது என்று பெருமை கொள்ளமாட்டார்கள். மக்களுக்கு காட்டுவதற்காக எதையும் செய்ய மாட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய சுன்னத்தில் இல்லாத ஒன்றை தங்களுக்கு அடையாளமாக, வழக்கமாக ஆக்கிக்கொள்ள மாட்டார்கள்.
ஆம், யாருடைய உள்ளத்தில் இக்லாஸ் என்ற தூய எண்ணம் இருக்குமோ அவர்களால்தான் தங்களையும் தங்கள் அமல்களையும் மறைத்துக் கொள்ள முடியும். கடுகளவு இக்லாஸ் இருந்தாலும் அவர் தன்னையோ தனது அமலையோ வெளிப்படுத்தவே மாட்டார்; தன்னைப் பற்றியும் தனது இல்மை பற்றியும் அமலைப் பற்றியும் மக்கள் அறிவதை விரும்ப மாட்டார். மக்களால் தான் அறியப்படுவதை விட தான் அறியப்படாமல் இருப்பதையே விரும்புவார். நெருப்பு தன் உடலை தீண்டுவதை விட ‘ரியா’ தன் அமலை தீண்டுவதை பயப்படுவார். மக்களை விட தன்னை உயர்வாகவோ கண்ணியமானவரகவோ ஒரு போது கருதமாட்டார். தான் அமலிலும் ஆன்மிகத்திலும் ஒரு நிலையை அடைந்துவிட்டதாக எப்போதும் கருத மாட்டார். தன்னை குறைவுடையவராகவே எப்போதும் பார்ப்பார். தன்னில் உள்ள நிறைகளை பார்க்காமல் தனது தவறுகளையும் குறைகளையும் உற்று நோக்கி அவற்றை சீர்திருத்துவதில் கவனம் செலுத்துவார்.
இதுதான் ஒரு உண்மை முஃமினின் நிலை. இப்படித்தான் நபித்தோழர்கள் இருந்தார்கள். அவர்களின் தோழர்கள் – தாபியீன்கள் இப்படித்தான் இருந்தார்கள். அதே வழியில்தான் இன்று வரை நல்லவர்கள் பயந்தவர்களாகவே பயணித்து வருகின்றார்கள்.
நல்லவர்களைப் போல ஆடைகள் அணிகின்ற பெண்களும் ஆண்களும் மிக கவனமாக இருக்க வேண்டும்.
நல்லவர்களைப் போல பேணுதலும் நல்ல குணங்களும் நல்ல அமலும் இல்லாமல் நல்லவர்களின் ஆடையை மட்டும் அணிந்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்களா? உள்ளத்தில் தக்வாவும் செயல்களில் பேணுதலும் இல்லாமல் ஆடை என்ன பலனை கொடுத்துவிட முடியும்!?
"ஆடையால் நல்லவர்களாக தோற்றமளிக்கும் பலர் செயல்களால் தீயவர்களாக இருப்பதுண்டு."
அல்லாஹ்வே! எங்களையும் அந்த வழியில் பயணிக்க வை! இக்லாஸைத் தா! ரியாவை விட்டும் பாதுகாத்துக்கொள்! இம்மை மறுமையின் நஷ்டத்தை விட்டும் பாதுகாத்துக்கொள்! மக்களுக்கு மத்தியில் பிரபலாமாகி உனக்கு முன் கண்ணியம் இழப்பதை விட்டும் எங்களை பாதுகாத்துக்கொள்! நீ விரும்பாத எல்லா கெட்ட குணங்களை விட்டும் எங்களை பாதுகாத்துக்கொள்! ஆமீன்!!
0 comments:
Post a Comment