Monday, November 14, 2016

Filled Under:

ஏ.டி.எம். சர்வீஸ் கட்டணங்கள் டிசம்பர் 30-ம்தேதி வரை முற்றிலும் ரத்து


அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். கிளைகளை பயன்படுத்துவதற்கான சர்வீஸ் கட்டணங்கள் டிசம்பர் 30-ம்தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.டி.எம். சர்வீஸ் கட்டணங்கள் டிசம்பர் 30-ம்தேதி வரை முற்றிலும் ரத்து
புதுடெல்லி:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம்தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பை தலைவர்கள் பலர் வரவேற்றாலும் நாடு முழுவதும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. ஏ.டி.எம். கிளைகளில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பணம் எடுக்கின்றனர். இருப்பினும் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம்.-கள் சில மணி நேரம் மட்டுமே இயங்குகின்றன. இதனால் கிடைக்கின்ற ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கின்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம். கிளைகளை பயன்படுத்துவதற்கான சர்வீஸ் கட்டணங்கள் டிசம்பர் 30-ம்தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சொந்த வங்கி கிளையை தவிர பிற ஏ.டி.எம்-களில் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

0 comments:

Post a Comment