
ஜம்மு,பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உண்மை தான் என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.ஜம்மு-காஷ்மீரின் உரி பகுதியில் அமைந்துள்ள ராணுவத் தலைமையகம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அண்மையில் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 19 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே பதான்கோட் தாக்குதலின் வடுக்கள் மறையாத நிலையில், இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளே இந்தத் தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியது. மேலும், இதுதொடர்பான ஆதாரங்களையும் பாகிஸ்தான் அரசிடம் இந்தியா வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் இதை திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக இந்திய ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” என்ற அதிரடி தாக்குதலில் இந்திய ராணுவம் ஈடுபட்டு பாகிஸ்தான் பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் 7 முகாம்களை அளித்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் 2 பேரும் கொல்லப்பட்டனர். ‘சர்ஜிகல்’ தாக்குதல் என்று இதற்கு இந்திய ராணுவம் பெயர் சூட்டியது. ஆனால், பாகிஸ்தான் சர்ஜிக்கல் ஸ்டிரக் நடைபெறவில்லை என்றும் எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு மட்டுமே நடைபெற்றதாகவும் சமாளித்து வருகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் இது தொடர்பான ஆதாரங்களை வெளியிடவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.இந்த நிலையில், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்பதையும், இந்த தாக்குதலுக்கு பின்பு நடந்த நிகழ்வுகளையும் காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே இந்திய எல்லையையொட்டி வசிப்பவர்கள் ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளனர்.அதிகாலையில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டதை கண்ணால் பார்த்ததாகவும், அவர்கள் சென்றபின், அங்குவந்த பயங்கரவாதிகள் இறந்துகிடந்தவர்களிடன் சடலத்தை மீட்டு, டிராக்டர்களில் கொண்டு சென்றனர். ஆனால் அந்த உடல்கள் எங்கே புதைக்கப்பட்டன என்பது தெரியவில்லை என அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
Post by:vkalathur kalam
0 comments:
Post a Comment