
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல், அப்பல்லோ மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ராகுலிடம் விளக்கம் அளித்தனர்.
ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
புது தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்த ராகுல் காந்தி, முற்பகல் 11.30 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய, ராகுல் காந்தி இன்று சென்னை வந்துள்ளார். இந்த பயணம் முன்கூட்டியே திட்டமிடப்படாத திடீர் பயணமாகவே கருதப்படுகிறது.
ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment