Thursday, October 6, 2016

Filled Under:

திருச்சியில் இந்து முன்னணிக்கு இடமில்லை

1. திருச்சி

கண்டன ஆர்ப்பாட்டம்!
kovai-hindu-munnani-riots-trichy-demo-01கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-இந்து முன்னணி வானர படைகள் நடத்திய வன்முறை வெறியாட்டமும், கடைகள் சூறையாடி கொள்ளையடிக்கப் பட்டதும் நாடே அறிந்த செய்தி.
காவி பயங்கரவாதிகள் திட்டமிட்டே நாடு முழுவதும் கலவரங்களை நடத்தி மக்களை மோதவிடும் சூழ்ச்சியை செய்து வருகின்றனர்.
மாட்டுத்தோலை உரித்தார்கள் என காரணம் காட்டி வடமாநிலங்களில் கலவரம் செய்து மோதலை உருவாக்குகின்றனர். மதமாற்றம் செய்கிறார்கள் என காரணம் காட்டி சிறுபான்மை மக்கள் மீது வன்முறையை ஏவிவிடுகின்றனர்.
kovai-hindu-munnani-riots-trichy-demo-02இஸ்லாமியர்கள், தலித் மக்கள், ஜனநாயக சக்திகள் என அனைவர் மீதும் தொடர்ந்து வன்முறையை கட்டவிழ்த்துவிடும் இந்த காவி பயங்கரவாதிகள் தமிழகத்திலும் காலுன்ற பார்க்கின்றனர். விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் அவர்கள் ஆண்டுதோறும் நடத்தி வரும் வெறியாட்டங்கள் ஒருபுறம், இன்னொருபுறம் இந்து முன்னணி, பா.ஜ.க மற்றும் சங்பரிவார அமைப்பு நிர்வாகிகள் எனப்படுவோர் பெரும்பாலும் சமூகவிரோத கிரிமினல் கும்பலாகவே உள்ளனர். ரியல் எஸ்டேட் புரோக்கர் , கட்டப்பஞ்சாயத்து, கள்ளத்தொடர்பு என செத்துப்போன பெரும்பாலானோரின் பின்புலம் இதுவாகவே உள்ளது. காவல்துறை அறிக்கைகளும் இதை உறுதிப்படுத்துகின்றது.
kovai-hindu-munnani-riots-trichy-demo-03இத்தகைய சூழ்நிலையில் தான் கோவையில் சசிகுமார் என்பவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவரின் இரத்தம் காயும் முன்னே வெறிகொண்டு முஸ்லீம் மக்களின் கடையை சூறையாடுவது, கொள்ளையடிப்பு, வாகனங்களை தீக்கிரையாக்குவது என பொறுக்கித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்துத்துவ வெறியர்கள்.
இஸ்லாமிய மக்களிடம் கோபத்தை தூண்டிவிட்டு அதில் குளிர் காய செய்த சதியே இத்தகைய வன்முறைக்கு காரணம். இதற்கு காவல்துறை துணை போயுள்ளது. 12 கி.மீ ஊர்வலத்தை அனுமதித்து அவர்களின் (வன்முறைக்கு) கொள்ளைக்கு காவல் காத்து நின்றது.
kovai-hindu-munnani-riots-trichy-demo-04இதை அனுமதித்தால் நாளை நாடு முழுவதும் இத்தகைய சமூக விரோதச் செயல்களை நிறைவேற்றுவார்கள். ஆகவே இதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி தரமறுத்தது. தடையை மீறி 04-10-2016 அன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மக்கள் அதிகாரம், ம.க.இ.க, பு.மா.இ.மு, ஆதித்தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,பெரியார் திராவிடர் கழகம், உள்ளிட்ட தோழர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.
kovai-hindu-munnani-riots-trichy-demo-05கட்சிகளைச் சேர்ந்த பலர் தேர்தல் நேரம் என்பதால் கைது நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு ஆர்ப்பாட்டத்தில் பார்வையாளர்களாக கலந்து கொண்டு சென்றனர். ஆதித் தமிழர் கட்சி செயலர் வீரமுருகன் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார்.
இப்போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தர்மராஜ்தலைமையேற்று நடத்தினார். காலை 11.00 மணி அளவில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தி ஒட்டி தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.
பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி முறியடிப்பதே இன்றைய நமது முக்கிய கடமையாக உள்ளது.

0 comments:

Post a Comment