மு.க.ஸ்டாலின் கார் திடீரென ‘பஞ்சர்’ ஆனதால் தொண்டரின் காரில் ஏறி விமான நிலையம் சென்றார்.

சென்னை:
தி.மு.க. பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார். இதற்காக அவர், வீட்டில் இருந்து தனது காரில் விமான நிலையம் நோக்கி வந்தார்.
ஆலந்தூர் கத்திப்பாரா பாலம் அருகே வந்தபோது திடீரென அவரது கார் ‘பஞ்சர்’ ஆனது. இதனால் மேற்கொண்டு காரை ஓட்ட முடியாது என டிரைவர் கூறினார். உடனே காரில் இருந்து மு.க.ஸ்டாலின் கீழே இறங்கினார். அவரை பாதுகாப்பு படையினர் சூழ்ந்து கொண்டனர்.
இதையடுத்து மு.க.ஸ்டாலின், அவருக்கு பின்னால் வந்த தி.மு.க. தொண்டர் ஒருவரின் காரில் ஏறி விமான நிலையத்துக்கு சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை பேட்டி எடுக்க நிருபர்கள் காத்திருந்தனர். ஆனால் விமானத்துக்கு நேரம் ஆனதால் அவர் நிருபர்களுக்கு பேட்டி எதுவும் தராமல் அவசரமாக சென்றுவிட்டார்.
தி.மு.க. பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார். இதற்காக அவர், வீட்டில் இருந்து தனது காரில் விமான நிலையம் நோக்கி வந்தார்.
ஆலந்தூர் கத்திப்பாரா பாலம் அருகே வந்தபோது திடீரென அவரது கார் ‘பஞ்சர்’ ஆனது. இதனால் மேற்கொண்டு காரை ஓட்ட முடியாது என டிரைவர் கூறினார். உடனே காரில் இருந்து மு.க.ஸ்டாலின் கீழே இறங்கினார். அவரை பாதுகாப்பு படையினர் சூழ்ந்து கொண்டனர்.
இதையடுத்து மு.க.ஸ்டாலின், அவருக்கு பின்னால் வந்த தி.மு.க. தொண்டர் ஒருவரின் காரில் ஏறி விமான நிலையத்துக்கு சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை பேட்டி எடுக்க நிருபர்கள் காத்திருந்தனர். ஆனால் விமானத்துக்கு நேரம் ஆனதால் அவர் நிருபர்களுக்கு பேட்டி எதுவும் தராமல் அவசரமாக சென்றுவிட்டார்.
0 comments:
Post a Comment