Saturday, October 29, 2016

Filled Under:

ஜெயலலிதா கை ரேகை பதிவால் சட்டச் சிக்கல்: அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு?

Jayalalithaa thumb record legal issue: AIADMK nomination of candidates likely to discount?

சென்னை: அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கக் கோரும் படிவத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா கையெழுத்திடாததால் அவர்களின் வேட்புமனுக்களை தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுவின் சின்னம் ஒதுக்கக்கோரும் பி படிவத்தில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா  கையெழுத்திற்கு பதில் ரேகை வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி வேட்பு மனு படிவம் 'ஏ 'யில் போடப்பட்டிருக்கும் கையெழுத்தும் படிவம் 'பி'யில் போடப்பட்டிருக்கும் கையெழுத்தும் ஒத்துப்போக வேண்டும். ஒத்துப்போனால் தான் அவர்களுக்கு கட்சியினுடைய சின்னத்தை ஒதுக்க முடியும் என்று கூறியுள்ளார். ஆனால் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவின் 'பி' படிவத்தில் கைரேகை படிந்திருப்பதால்  வேட்புமனு சட்டப்படி செல்லாது என்று கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் பெயர் எழுதப்படாமல் டைப் செய்திருப்பது சட்டப்படி தவறு என துரைசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வேட்புமனுக்களை மீதான பரிசீலனை வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது அப்போது தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுக வேட்பாளர்களின் மனுக்களை ஏற்கக்கூடாது என வலியுறுத்தப்போவதாக சுயேட்சை வேட்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வேட்புமனு பரிசீலனை முடியும் வரை அதிமுக வேட்பாளர்கள் குறித்த சர்ச்சை நீடிக்கும் என்றே தெரிகிறது. 

0 comments:

Post a Comment