
வாஷிங்டன் : மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை இரு ஆண்டுகளுக்கு முன் சுட்டு வீழ்த்தியது, ரஷ்ய தயாரிப்பான் ‛பக்' ரக ஏவுகணை என நெதர்லாந்து நாட்டு விசாரணைக் குழு அறிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி, மலேசியாவிலிருந்து நெதர்லாந்துக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.,17, கிழக்கு உக்ரைன் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இப்பகுதி ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அவ்விமானத்திலிருந்த 283 பயணிகள் 15 விமான ஊழியர்கள் என மொத்தம் 298 பேர் பலியாகினர்.
இதுகுறித்து நெதர்லாந்து விசாரணைக் குழு தெரிவித்ததாவது:எம்.எச்.,17 தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், அந்த விமானம் ரஷ்யத் தயாரிப்பான ‛பக்' ரக ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் 9-எம்-83 வரிசை எண்ணைக் கொண்ட அந்த ஏவுகணையை வீசும் தளவாடம், ரஷ்ய எல்லையிலிருந்து கிழக்கு உக்ரைனுக்குக் கொண்டு வரப்பட்டு, விமானத்தை சுட்டு வீழ்த்திய பிறகு மீண்டும் ரஷ்யாவுக்கே திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post by:vkalathur kalam
0 comments:
Post a Comment