ஆலந்தூர்சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.ரகசிய தகவல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து அத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, சென்னையில் இருந்து கொழும்பு வழியாக மலேசியாவிற்கு சில பயணிகள் செல்ல இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த சென்னையை சேர்ந்த செந்தில்குமார்(வயது 35), குமரேசபாபு(38), ராஜசேகர்(34) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.ஆனால் 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். இதையடுத்து அவர்களுடைய உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ கரன்சிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.ரூ.60 லட்சம் பறிமுதல்
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 3 பேரின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் எதுவுமில்லை. இதனால் இந்த பணம் ஹவாலா பணமாக இருக்குமோ? இதை தந்து அனுப்பியவர்கள் யார்? என 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து அத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, சென்னையில் இருந்து கொழும்பு வழியாக மலேசியாவிற்கு சில பயணிகள் செல்ல இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்த சென்னையை சேர்ந்த செந்தில்குமார்(வயது 35), குமரேசபாபு(38), ராஜசேகர்(34) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.ஆனால் 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள். இதையடுத்து அவர்களுடைய உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ கரன்சிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.ரூ.60 லட்சம் பறிமுதல்
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 3 பேரின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் எதுவுமில்லை. இதனால் இந்த பணம் ஹவாலா பணமாக இருக்குமோ? இதை தந்து அனுப்பியவர்கள் யார்? என 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment